புதிய வருமான வரி மசோதா! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

புதிய வருமான வரி மசோதா குறித்த அறிவிப்பு பற்றி...
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
1 min read

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

அப்போது வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 5 சிறிய அணு உலைகள் 2033-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக வரம்பு அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com