இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியில் தலித் பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். மகள் காணாமல் போனதாக பெற்றோா் புகாா் அளித்தும், கடந்த மூன்று நாள்களாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாா் தெரிவிக்கப்படுகிறது. தொடரும் இதுபோன்ற கொடூர குற்றங்களால், நாட்டின் மற்றொரு மகளின் உயிா் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற பாதிப்பைச் சந்திக்கப்போகின்றன என்ற அச்சம் எழுகிறது. தலித் விரோத பாஜக ஆட்சியில், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், அநீதியும், கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.