மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் - (கோப்புப் படம்)
Updated On :4 பிப்ரவரி 2025, 2:31 pm

DIN

2022 - 24 நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து 1.55 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

தகுதி அற்றவர்களாக கருதப்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தேசிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்ததாவது,

''2022 - 23 நிதியாண்டில் 86,17,887 பேரும், 2023 - 24 நிதியாண்டில் 68,86,532 பேரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த இரு நிதியாண்டுகளிலும் சேர்த்து 1,55,04,419 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

போலி அட்டை அல்லது நகல், தவறான வேலை அட்டை, கிராம பஞ்சாயத்திலிருந்து நிரந்தரமாக வீடு மாறியது மற்றும் நகர்ப்புற எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் இருப்பது போன்ற காரணங்களால் தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தை செயல்படுத்துவது மாநில அல்லது யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாக உள்ளது. வேலை அட்டைகளை நீக்குவது அல்லது புதுப்பிப்பது மாநில அரசின் வழக்கமான பொறுப்பாகும்.

இதேவேளையில் தகுதியான வேலை அட்டைகள் நீக்கப்படவில்லை என்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பாஸ்வான், மொத்தமுள்ள 13.41 கோடி வேலையாள்களில் 13.34 கோடி பேரின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து வேலை செய்துவருபவர்களை நீக்குவது அல்லது மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொடுக்கப்படுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.