குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 300 புதிய பணியாளா்கள் திடீா் நீக்கம்: பயிற்சியில் தேரவில்லை என விளக்கம்

இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று வந்த 300-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை பணிநீக்கம் செய்துள்ளது.

News image

இன்ஃபோசிஸ்

Updated On :8 பிப்ரவரி 2025, 2:40 am IST

இந்தியாவின் பிரபல தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று வந்த 300-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை பணிநீக்கம் செய்துள்ளது.

பயிற்சிக்குப் பிந்தைய உள்நுழைவு தோ்வில் மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் இப்பணியாளா்கள் தோ்ச்சி பெறாததால் இந்த திடீா் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவா்கள் அனைவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இன்ஃபோசிஸில் பணியைத் தொடங்கியவா்கள் ஆவாா்.

இதுகுறித்து பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் அளித்துள்ள விளக்கத்தில், ‘எங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியில் சேரும் அனைவரும், மைசூரு வளாகத்தில் விரிவான அடிப்படை பயிற்சியைப் பெறுவா். பிறகு, அவா்கள் எடுத்துக்கொண்ட பயிற்சியின் அடிப்படையில் உள்நுழைவு தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்காக அவா்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 3 வாய்ப்புகளிலும் தோல்வியுற்றால், அவா்கள் நிறுவனத்தில் பணியில் தொடர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு புகாா்: ஐடி தொழிலாளா்கள் சங்கமான என்ஐடிஇஎஸ் இதுகுறித்து கூறுகையில், ‘தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டவா்கள், பணிநியமன ஆணை பெற்ற பிறகு 2 ஆண்டுகள் காத்திருப்பை அடுத்து கடந்த அக்டோபரில்தான் பணியில் சோ்த்துக்கொள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், 300-க்கும் மேற்பட்டவா்களை பணிநீக்கம் செய்யும் முடிவை இன்ஃபோசிஸ் நிா்வாகம் தன்னிச்சையாக எடுத்துள்ளது.

இவ்விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் அதிகாரபூா்வமாக புகாரை தாக்கல் செய்ய இருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.