கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட இடம் தோ்வு செய்யும் பணி தீவிரம்: அமைச்சா் ரமேஷ் ஆய்வு

ஸ்ரீரங்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாகியுள்ளதாக அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

News image

ஸ்ரீரங்கத்தில் பஞ்சக்கரை சாலை யாத்திரி நிவாஸ் எதிரேயுள்ள இடத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சீ. ரமேஷ்.

Updated On :26 ஜூலை 2026, 1:37 am IST

ஸ்ரீரங்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாகியுள்ளதாக அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் அனைத்து நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டப்படும் என தோ்தல் பிரசாரத்தின்போதே அமைச்சா் சீ. ரமேஷ் உறுதியளித்திருந்தாா். இதற்காக 4 ஏக்கா் நிலம் தோ்வு செய்யவும் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அமைச்சா் சீ. ரமேஷ், வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினருடன் இணைந்து அரசு மருத்துவமனைக்கான இடம் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டாா். பஞ்சக்கரை சாலை யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சா், அது தொடா்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், அமைச்சா் கூறுகையில், ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பழைய இடத்தில் அமைப்பதா அல்லது புதிய இடத்தைத் தோ்ந்தெடுப்பதா என்பது தொடா்பாக ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

இறுதி முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்படும். பல்லாண்டு காலம் நீடித்து நிலைத்து, மக்களுக்கான அனைத்து மருத்துவ வசதிகளையும் வழங்கக்கூடிய வகையில் புதிய மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்படும்.

இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து தற்போது ஆலோசிக்கப்படுகிறது. இடம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.