மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் முன்னாள் கிராமத் தலைவர் வெட்டிக் கொலை!

முன்னாள் கிராமத் தலைவர் கொலைப் பற்றி..

News image
Updated On :7 பிப்ரவரி 2025, 7:14 am

DIN

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் முன்னார் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஒருவரை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

வியாழனன்று இரவு அரன்பூர் கிராமத்தில் உள்ள ஜோகா பார்சே (52) என்பவரின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் முற்றுகையிட்டு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கோடரியால் வெட்டிக் கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும், அரன்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மாவோயிஸ்ட் துண்டுப்பிரசுரங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

பாரா பகுதியில் வசிக்கும் ஜோகா பார்சே, முன்பு அரன்பூர் கிராம பஞ்சாயத்தின் தலைவராக பணியாற்றினார். அவரது மனைவி தற்போதைய கிராமத் தலைவராக உள்ளார்.

பஞ்சாயத்துத் தேர்தல் பிப். 17, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறந்தவர் பஞ்சாயத்துத் தேர்தலில் கிராமத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தந்தேவாடா மாவட்டத்தில் மூன்று கட்டங்களாகப் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது.

பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் கடந்த ஆண்டு நக்சலைட் வன்முறையின் தனித்தனி சம்பவங்களில் 68 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.