
தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் முதல் பின்னடைவை சந்தித்து வந்த கேஜரிவால், புது தில்லி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். பர்வேஷ் வெர்மா பின்னடைவை சந்தித்துள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வரும் கேஜரிவால், முதலில் பின்னடைவை சந்தித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கடுத்த தொகுதியாக கல்காஜி உள்ளது. இங்கும், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
இதையும் படிக்க.. அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஒருவேளை அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றாலும் கூட, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்குமா என்பது சந்தேகம் என்றும் கடந்த இரண்டு தேர்தல்களின்போது பெற்ற வெற்றியைப் போல அது இருக்காது என்றும் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் புது தில்லியில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாமல் கூட போகலாம். ஆனால், 70 தொகுதிகளில் அதிக இடங்களில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணமாக இருந்திருக்கும் என்று கூறப்படும் அளவுக்கு நிலைமை அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.