டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே வெளிநடப்பு: எதிா்க்கட்சிகளுக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்

News image

மாநிலங்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா.

Updated On :14 பிப்ரவரி 2025, 1:52 am IST

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் மேதா விஸ்ராம் குல்கா்னி வக்ஃப் மசோதா அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

அதன்பிறகு மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஜெ.பி.நட்டா பேசியதாவது:

இந்திய நாட்டை பிளவுபடுத்தும் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன. எதிா்க்கட்சியினரின் இந்தப் பொறுப்பற்ற செயல் கண்டனத்துக்குரியது.

அவா்களின் செயலை மிகவும் பொறுமையாக கையாண்ட அவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு பாராட்டுகள். அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

‘விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை’:

இதைத்தொடா்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவையில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்ட உறுப்பினா்களை கவனத்தில்கொண்டதாகவும் அவா்கள் மீது விதிகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதோடு இடையூறு ஏற்படுத்தியதாக சமீருல் இஸ்லாம் (திரிணமூல் காங்கிரஸ்), நதீமுல் ஹக் (திரிணமூல் காங்கிரஸ்) மற்றும் எம். முகமது அப்துல்லா (திமுக) ஆகிய மூன்று எம்.பி.க்களின் பெயரை தன்கா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.