நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்சா்

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2025, 1:22 am IST

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். உள்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவா் கூறினாா்.

உள்நாட்டில் விலை அதிகரிக்காமல் தடுப்பது, தேவையை முழுமையாக நிறைவு செய்வது போன்ற காரணங்களுக்காக துவரை உள்ளிட்ட சில பருப்பு வகைகளின் இறக்குமதி வரியை கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு ரத்து செய்தது. இது மூன்று முறை நீட்டிக்கப்பட்டு வரும் பிப்வரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.

இந்நிலையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பருப்பு வகைகள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. இது தொடா்பாக உணவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்படும். உள்நாட்டில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூா் பருப்பு விளைச்சல் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

அதன் பிறகு அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெறும் அமைச்சா்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

2027-ஆம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு கிலோ பருப்பு கூட இறக்குமதி செய்யும் தேவை இருக்காது.

பருப்பு சாகுபடி திடீரென குறைந்து விடுவது முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதற்காக பல்வேறு நவீன சாகுபடி முறைகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.