கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா!

பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகள் நிறுத்திவைப்பு

AI | X

Published On :

பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், இதற்காக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தலைமையில் செயல்திறன் மேம்பாட்டுத் துறையையும் புதிதாக உருவாக்கியுள்ளது.

எந்தெந்த வகைகளில் அரசின் செலவுகளை குறைக்க முடியுமோ, அவற்றையெல்லாம் இந்தத் துறை ஆராய்ந்து வருகிறது. அதன் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தி வைக்கவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு அளித்து வந்த 21 மில்லியன் டாலர் நிதியுதவியும் நிறுத்தப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதை அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

  • மொஸாம்பிக் நாட்டுக்கு மருத்துவத்துக்காக வழங்கப்பட்டு வந்த 10 மில்லியன் டாலர்

  • கம்போடியா நாட்டில் இளைஞர் திறனுக்காக வழங்கி வந்த 9.7 மில்லியன் டாலர் மற்றும் கருத்து சுதந்திரத்துக்காக வழங்கி வந்த 2.3 மில்லியன் டாலர்

  • பராகுவே நாட்டின் சிவில் சமூக மையத்துக்கு வழங்கி வந்த 32 மில்லியன்

  • செர்பியாவில் பொது கொள்முதல் திட்டத்துக்காக வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன்

  • தேர்தல் மற்றும் அரசியல் செயல்முறை வலுப்படுத்தும் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த 486 மில்லியன் டாலர் (இந்தியாவுக்கு அளித்து வந்த 21 மில்லியன் டாலர் உள்பட)

  • வங்கதேசத்தில் வலுவான அரசியலுக்கான 21 மில்லியன்

  • நேபாளத்தில் நிதி கூட்டாட்சிக்கு வழங்கி வந்த 20 மில்லியன் டாலர் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான 19 மில்லியன்

  • லைபீரியா நாட்டில் வாக்காளர் நம்பிக்கை திட்டத்துக்கு வழங்கி வந்த 1.5 மில்லியன்

  • மாலி நாட்டில் சமூக ஒற்றுமைக்காக வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன்

  • தென்னாப்ரிக்காவில் ஜனநாயகப் பணிகளுக்காக வழங்கி வந்த 2.5 மில்லியன்

  • சமூக - பொருளாதார ஒற்றுமைகளை அதிகரிக்க கொசோவோ ரோமா, அஸ்காலி, எகிப்து நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 2 மில்லியன்

  • ஆசியாவில் கற்றல் மேம்பாட்டை அதிகரிக்க வழங்கி வந்த 47 மில்லியன்

  • பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகார மையத்துக்காக வழங்கி வந்த 40 மில்லியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.