மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அம்பேத்கர் மீதான அவதூறு: அமித்ஷா மீதான வழக்கு மார்ச் 1 அன்று விசாரணை!

அமித்ஷா மீதான வழக்கு விசாரணை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
அமித்ஷா
Updated On :19 பிப்ரவரி 2025, 5:00 pm

DIN

அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 1 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் மீதான விசாரணை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியின் வாக்குமூலத்தை இன்று பதிவு செய்ய முடியாததால் மார்ச் 1 அன்று ஒத்தி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 17 அன்று மாநிலங்களவையில் அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழா குறித்த விவாதத்தில் பதிலளித்த அமித்ஷா, காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவதாக விமர்சித்தார்,

மேலும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் சொர்க்கத்தில் இடமாவது கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கோடிக்கணக்கான மக்களால்கடவுளாகக் கருதப்படும் ஒரு நபரைப் பற்றி அமித்ஷா அவதூறாகப் பேசியதாகவும், அவரது கருத்துகள் தனது உணர்வுகளை மிகவும் புண்படுத்தியதாகவும் மனுதாரர் ராம் கெலாவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சாட்சியின் வாக்குமூலம் பிப்ரவரி 7 அன்று பதிவு செய்யப்படவிருந்தது. ஆனால் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

முதல் சாட்சியின் வாக்குமூலம் ஜனவரி 23 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.