எண்ம (டிஜிட்டல்) உலகில் தன்மறைப்பு நிலையை (பிரைவஸி) மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவரும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் என்ஹெச்ஆர்சி சார்பில் "டிஜிட்டல் காலத்தில் தன்மறைப்பு நிலை மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல்' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் என்ஹெச்ஆர்சி தலைவர் வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், "டிஜிட்டல் உலகில் தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம். அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தன்மறைப்பு நிலை பாதுகாப்புக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருக்க வேண்டும்.
டிஜிட்டல் பயன்பாட்டில் குறைபாடுகள் இருக்கக் கூடாது. புதுமையான கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, ஒருவரின் தன்மறைப்பு நிலை ஆகியவற்றை சமநிலையுடன் கையாளும் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு டிஜிட்டல் உரிமைகள், நிறுவனங்கள் பொறுப்பேற்பது ஆகியவை குறித்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விவாதங்களை ஊக்குவிப்பதில் என்ஹெச்ஆர்சி உறுதியாக உள்ளது' என்றார்.
என்ஹெச்ஆர்சி உறுப்பினரும் முன்னாள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான வித்யுத் ரஞ்சன் சாரங்கி பேசுகையில், "டிஜிட்டல் பயன்பாடு குறித்துப் பொதுமக்கள் பலருக்குத் தெரியவில்லை. அவர்கள் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்த பிறரைச் சார்ந்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே சாமானியர்கள் டிஜிட்டல் முறையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை அதிகரிக்க, அந்தத் தொழில்நுட்ப நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வடகிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: இரு சிறுவா்கள் கைது

பாஜக எதிா்ப்பு நிலையை மாற்றினால் திமுகவுக்கு விபரீத முடிவே ஏற்படும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

அரசு வழக்கறிஞா் நியமனம்!

திருமணத்தை மீறிய உறவுக்கு ஆதாரம்: ‘கைப்பேசி அழைப்பு விவரங்களைக் கோருவது தன்மறைப்பு நிலை உரிமை மீறல் அல்ல’
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



