கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயில்(கோப்புப்படம்)

ரயில்(கோப்புப்படம்)
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் பலாசோரில் உள்ள சபிரா ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை திடீரென தடம்புரண்டது.
தண்டவாளத்தையொட்டி இருந்த மின்கம்பத்தில் ரயில் மோதியதால் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் மக்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...