கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் பலாசோரில் உள்ள சபிரா ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை திடீரென தடம்புரண்டது.
தண்டவாளத்தையொட்டி இருந்த மின்கம்பத்தில் ரயில் மோதியதால் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் மக்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி: இன்று முதல் சோழன் விரைவு ரயில் வழித்தடம் தற்காலிக மாற்றம்

அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



