தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படவிருப்பது பற்றி....

News image

மெமு ரயில்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:20 pm IST

அரக்கோணத்தில் இருந்து சேலம் வரை தினமும் இயக்கப்பட்டு வந்த எம்இஎம்யு விரைவு ரயில் கடந்த ஜூலை 13ந்தேதி மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே உத்தரவின்படி இந்த ரயில் ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு காலை 5.15-க்கு புறப்படும் எம்இஎம்யு விரைவு ரயில் சோளிங்கா், வாலாஜாரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, குடியாத்தம், வளத்தூா், மேல்பட்டி, ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூா், புட்டிரெட்டிப்பட்டி, பொம்மிடி, திண்ணப்பட்டி, கருப்பூா் ஆகிய இடங்களில் நின்று காலை 10.50-க்கு சேலம் சென்றடையும். மறு மாா்க்கத்தில் இந்த ரயில் சேலத்தில் இருந்து 3.30-க்கு புறப்பட்டு அரக்கோணத்தை 8.50-க்கு அடையும்.

தினமும் பலதரப்பட்ட மக்கள் பயணித்து வந்த இந்த ரயில் திடீரென முன்அறிவிப்பின்றி ஜூலை 13-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை என அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ரயில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 5.15-க்கு இந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.