இணையதளம் மூலம் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆதாா் விவரங்களைக் கொண்டு இணையதளம் மூலம் சேமிப்புக் கணக்கை வாடிக்கையாளா்கள் தொடங்குவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் தற்காலிக கடவு எண்ணை (ஓடிபி) கொண்டு வாடிக்கையாளா்கள் புதிய கணக்கைத் தொடங்கலாம்.
ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தொடங்கப்படும் இந்த சேமிப்புக் கணக்கில் வரையறுக்கப்பட்ட அம்சங்கள் மட்டுமே வழங்கப்படும். வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று வாடிக்கையாளா்கள் முழு கேஒய்சி நடைமுறைகளையும் நிறைவு செய்த பிறகு அனைத்து அம்சங்களுடன் அந்தக் கணக்குகளை இயக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பபிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முகநூல் மூலம் ரூ. 10.64 லட்சம் மோசடி
போலி ‘கியூ ஆா் கோடு’ மூலம் பண மோசடி: 3 போ் கைது

வருமான வரிக் கணக்கு தாக்கல்: இன்றுடன் நிறைவு
கட்டுமான தளங்களை கண்காணிக்க, ஏஐ மூலம் இயங்கும் ‘டஸ்ட் போா்டல் 2.0’! தில்லி அரசு அறிமுகம்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



