குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

News image

சந்திரபாபு நாயுடு - படம் | தெலுங்கு தேசம் கட்சி

Updated On :25 பிப்ரவரி 2025, 10:11 pm IST

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சி 8.6% ஆக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் மாநில வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுப் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஆந்திர மாநிலத்தில் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 62,000 கோடியாக அதிகரித்துள்ளது.

2023 - 24 நிதியாண்டில் (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில்) மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.6% ஆக இருந்தது. ஆனால், 2024 - 25 நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 13% ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டில் 3 மாதங்களுக்குப் பிறகுதான் நாம் ஆட்சி அமைத்தோம். இந்தக் குறுகிய இடைவெளியில் நாம் இதனைச் செய்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 16.06 லட்சம் கோடியாக இருக்கும்.

2018 - 19 நிதியாண்டில் முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியில் 11.4% ஆக இருந்த வளர்ச்சி விகிதம், ஜெகன் மோகன் ஆட்சியில் அடுத்த ஆண்டிலேயே 5.25% ஆக குறைந்தது. 2019 – 20 ஆட்சியில் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 45,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி தொடர்ந்திருந்தால் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 9.71 லட்சம் கோடியாக இருந்திருக்கும். ஆனால் தற்போது ரூ. 9.26 லட்சம் கோடியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.