திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

தெலங்கானா சுரங்கம்: விபத்து இடத்தை நெருங்கியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் தொடரும் சிக்கல்...

News image

மீட்புப் பணி. - PTI

Updated On :26 பிப்ரவரி 2025, 4:28 pm IST

தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் 5-வது நாளாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், கடற்படை, எலிவளை சுரங்க தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 நாள்களில் இல்லாத வகையில், இன்று மீட்புப் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், எலிவளை சுரங்க தொழிலாளர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர், சுரங்கத்தில் இறுதிவரை சென்று திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்தின் கடைசி 50 மீட்டர் முழுவதும் சேறும் இடிபாடுகளும் இருக்கும் நிலையில், இடிபாடிகளில் சிக்கியுள்ள யாரையும் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையும் சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர், ஆனால், எவ்வித முன்னேற்றமும் அடையாததால் இரவு வெளியேறினர்.

வண்டல் மண் மற்றும் சுரங்கத்துக்குள் தண்ணீர் தொடர்ந்து பாய்வதால், மீட்புக் குழுவினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து மீட்புக் குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சுரங்கத்தின் மண் மாதிரிகளை சேகரித்துள்ள இந்திய புவியியல் ஆய்வுக் குழுவினர் மண்ணின் வலிமை மற்றும் பிற ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.

மேலும், சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் அமைச்சர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.