மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் கைது!

துபைக்கு கடந்த முயன்ற டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...

News image
பறிமுதல் செய்யப்பட்ட டாலர்கள்.
Updated On :27 பிப்ரவரி 2025, 4:20 am

DIN

நோட்டுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து 3 மாணவிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை புணே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இந்த பையில் ஆவணங்கள் இருப்பதாக பயண முகவர் தெரிவித்ததாகவும் மாணவிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் மூலம் கடத்தல்

புணேவில் இருந்து மூன்று மாணவிகள் 7 நாள்கள் பயணமாக துபைக்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோத ஹவாலா பணத்தை மாணவிகள் கடத்திச் சென்றதாக புணே சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாணவிகளின் நோட்டுபுத்தகங்களுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 3.47 கோடி) கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக, துபை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு மூன்று மாணவிகளையும் திருப்பி அனுப்ப புணே சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இதனடிப்படையில் மூன்று மாணவிகளும் புணே விமான நிலையத்துக்கு பிப். 17ஆம் தேதி வந்த நிலையில், அவர்களிடம் இருந்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து விசாரணையை தொடங்கினர்.

இருவர் கைது

புணேவைச் சேர்ந்த குஷ்பு அகர்வால் என்ற பயண முகவர், மாணவிகள் துபைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அவர்கள் இண்டிகோ விமானத்தில் துபை செல்வதற்கு முன்னதாக கடைசி நிமிடத்தில் ஒரு பேக்கை அவர்களிடம் கொடுத்த குஷ்பு அகர்வால், இதில் தனது அலுவலக ஆவணங்கள் இருப்பதாகவும் இதனை துபையில் அழைத்துச் செல்பவரிடம் கொடுக்குமாறும் அகர்வால் கேட்டுள்ளார்.

அவர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பேக்கை துபைக்கு கொண்டு சென்றதாக மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பயண முகவர் அகர்வாலை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மும்பையை சேர்ந்த அந்நிய செலவாணியில் ஈடுபடும் முகமது அமீர் என்பவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.