நோட்டுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து 3 மாணவிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை புணே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இந்த பையில் ஆவணங்கள் இருப்பதாக பயண முகவர் தெரிவித்ததாகவும் மாணவிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் மூலம் கடத்தல்
புணேவில் இருந்து மூன்று மாணவிகள் 7 நாள்கள் பயணமாக துபைக்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சட்டவிரோத ஹவாலா பணத்தை மாணவிகள் கடத்திச் சென்றதாக புணே சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாணவிகளின் நோட்டுபுத்தகங்களுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 3.47 கோடி) கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக, துபை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு மூன்று மாணவிகளையும் திருப்பி அனுப்ப புணே சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதனடிப்படையில் மூன்று மாணவிகளும் புணே விமான நிலையத்துக்கு பிப். 17ஆம் தேதி வந்த நிலையில், அவர்களிடம் இருந்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!
இருவர் கைது
புணேவைச் சேர்ந்த குஷ்பு அகர்வால் என்ற பயண முகவர், மாணவிகள் துபைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அவர்கள் இண்டிகோ விமானத்தில் துபை செல்வதற்கு முன்னதாக கடைசி நிமிடத்தில் ஒரு பேக்கை அவர்களிடம் கொடுத்த குஷ்பு அகர்வால், இதில் தனது அலுவலக ஆவணங்கள் இருப்பதாகவும் இதனை துபையில் அழைத்துச் செல்பவரிடம் கொடுக்குமாறும் அகர்வால் கேட்டுள்ளார்.
அவர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பேக்கை துபைக்கு கொண்டு சென்றதாக மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பயண முகவர் அகர்வாலை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மும்பையை சேர்ந்த அந்நிய செலவாணியில் ஈடுபடும் முகமது அமீர் என்பவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்

தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி இந்தியாவிற்கு நாடு கடத்தல்!

ரூ. 9 லட்சம் பங்குச் சந்தை முதலீட்டு மோசடி: 2 போ் கைது

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


