ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உ.பி. முழுவதும் கொண்டு செல்லப்படும் கும்பமேளா நீர்!

உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கும்பமேளா நீர் எடுத்துச் செல்ல ஏற்பாடு...

News image
திரிவேணி சங்கமம்(கோப்புப்படம்)- ANI
Updated On :28 பிப்ரவரி 2025, 6:43 am

DIN

மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத மக்களுக்காக மாநிலம் முழுவதும் புனித நீரைக் கொண்டு செல்வப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 வரை 45 நாள்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடினர்.

இந்த நிலையில், கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத உத்தரப் பிரதேச மக்களுக்காக 75 மாவட்டங்களுக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீரைக் கொண்டு செல்ல முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கும்பமேளாவுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 365 தீயணைப்புத் துறையினரின் வாகனங்கள் மூலம் புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த புதன்கிழமையுடன் கும்பமேளா முடிவடைந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வெள்ளிக்கிழமை திரும்பச் செல்கிறது.

இந்த வாகனங்கள் மூலம் திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.