மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் எண்ணிலிருந்து மகாராஷ்டிர முதல்வருக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.

News image
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் - கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2025, 7:19 am

DIN

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து வாட்சப் செயலியில் மிரட்டல் செய்தி வந்துள்ளது.

இந்தச் செய்தி கிடைத்தவுடன் அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மும்பை நகர போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் ஃபட்னவீஸுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்கப்பட்ட எண் குறித்து விசாரணை நடத்தியபோது அதை அனுப்பியவரின் பெயர் ‘மாலிக் ஷாபாஸ் ஹுமாயுன் ராஜ தேவ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நபரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடந்த வாரம் மர்ம நபர் ஒருவரிடமிருந்து இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஷிண்டேவின் காரில் வெடிகுண்டு வைக்கவிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோரேகான், ஜேஜே மார்க் காவல்நிலையங்களுக்கும் தலைமைச் செயலகத்துக்கும் இந்த மெயில்கள் அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஷிண்டேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.