சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் எண்ணிலிருந்து மகாராஷ்டிர முதல்வருக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.

News image

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் - கோப்புப் படம்

Updated On :28 பிப்ரவரி 2025, 12:49 pm IST

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து வாட்சப் செயலியில் மிரட்டல் செய்தி வந்துள்ளது.

இந்தச் செய்தி கிடைத்தவுடன் அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மும்பை நகர போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் ஃபட்னவீஸுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்கப்பட்ட எண் குறித்து விசாரணை நடத்தியபோது அதை அனுப்பியவரின் பெயர் ‘மாலிக் ஷாபாஸ் ஹுமாயுன் ராஜ தேவ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நபரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடந்த வாரம் மர்ம நபர் ஒருவரிடமிருந்து இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஷிண்டேவின் காரில் வெடிகுண்டு வைக்கவிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோரேகான், ஜேஜே மார்க் காவல்நிலையங்களுக்கும் தலைமைச் செயலகத்துக்கும் இந்த மெயில்கள் அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஷிண்டேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.