குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

தில்லி சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த கூட்டத்தில் ரேகா குப்தா பங்கேற்பு!

தில்லி அரசுக்கும் தில்லி காவல்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த கூட்டம்..

News image

ரேகா குப்தா - அமித் ஷா - impress

Updated On :28 பிப்ரவரி 2025, 12:43 pm IST

உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தில்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்துள்ளார்.

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை முக்கியமான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்த கூட்டம் உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

தில்லியில் சமீபத்திய முன்னேற்றங்கள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சகம், தில்லி காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக அமைக்கப்பட்ட தில்லி அரசுக்கும் தில்லி காவல்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும், நகரத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும் இந்த கூட்டம் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பாதுகாப்பு நிலைமைகளை அமித் ஷா தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். மேலும் தேசிய தலைநகரான தில்லியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அங்கு வலுவான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அவசியத்தை முன்னர் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியின் நான்காவது பெண் முதல்வராக பிப்ரவரி 20 அன்று ரேகா குப்தா பதவியேற்றார். இந்த கூட்டத்தில் தில்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா மற்றும் பிற மூத்த தில்லி காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.