மேற்கு தில்லியில் ஆறு வழி பஞ்சாபி பாக் மேம்பாலத்தை அந்த மாநிலத்தின் முதல்வர் அதிஷி இன்று திறந்துவைத்தார்.
மேம்பாலத்தை திறந்துவைத்தபின் அதிஷி கூறியதாவது,
பஞ்சாபி பாக் மேம்பாலத்தின் நீளம் 1.12 கி.மீ ஆகும். இந்த மேம்பாலத்தினால் தினமும் 3.45 லட்சம் பேர் பயனடைவார்கள். மேம்பாலம் திறக்கப்பட்டதனால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தில்லி மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், மேம்பாலத்தினால் 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படும். பஞ்சாபி பாக் மேம்பாலம் கடந்த பத்து ஆண்டுகளில் 39-வது மேம்பாலம் ஆகும்.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் 25-ஆம் தேதி, நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள அப்சரா எல்லையை ஆனந்த் விஹாரை இணைக்கும் ஆறு வழி மேம்பாலத்தை அதிஷி திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்தால் தினமும் சுமார் 1.5 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கரூா்: 4 பேரவைத் தொகுதிகளில் 62,634 போ் வாக்களிக்கவில்லை!
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்

தில்லியில் ஓராண்டில் 45,000 குடும்ப அட்டைகள் ரத்து
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


