சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்த உதவியும் பிரதமர் செய்யவில்லை: கேஜரிவால்

கடந்த 10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :3 ஜனவரி 2025, 8:09 pm IST

கடந்த 10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி செய்த சாதனைகளை சொல்ல பல மணி நேரம் ஆகும். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை என ஏராளமான வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. ஒழுங்காக வேலை செய்வோர் குறை சொல்ல மாட்டார்கள். குறை சொல்வோர் வேலை செய்ய மாட்டார்கள்.

ஏதாவது வேலை செய்திருந்தால் தில்லி மக்களை பிரதமர் குறை சொல்லியிருக்க மாட்டார். 10 ஆண்டுகளில், பாஜக தில்லியில் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை. 2022-க்குள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தனர், ஆனால் ஐந்து ஆண்டுகளில் 4,700 வீடுகளை மட்டுமே கட்டியுள்ளனர்.

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால், அவர்கள் தில்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் அழித்திருப்பார்கள். பேரிடரில் தில்லி இல்லை. உண்மையான பேரிடரே பாஜகதான். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தலைநகர் தில்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன. 3) தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய மோடி, 'தில்லி பேரிடரில் உள்ளது. ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளில், ஏழை மக்களுக்கான நிதியில், பள்ளி குழந்தைகளுக்கான நிதியில் அவர்கள் ஊழல் செய்து வருகிறார்கள். ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து விடுவிக்க தில்லி மக்கள் முடிவு செய்துவிட்டனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.