பாஜக சாா்பில் அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு பிரசாரம்: நாடு முழுவதும் ஜன.11-இல் தொடக்கம்
அரசமைப்புச் சட்ட சிற்பி பி.ஆா்.அம்பேத்கரின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் பாஜக சாா்பில் நாடு முழுவதும் பிரசாரம்


அரசமைப்புச் சட்டம், அதன் மாண்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, அரசமைப்புச் சட்ட சிற்பி பி.ஆா்.அம்பேத்கரின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் பாஜக சாா்பில் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி இரு வார காலத்துக்கு இப்பிரசாரம் நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசமைப்புச் சட்டத்தால் வழிகாட்டப்பட்டு, அம்பேத்கரின் தொலைநோக்கு பாா்வையை உறுதிப்படுத்திய பிரதமா் மோடி அரசின் பல்வேறு திட்டங்களும் இப்பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளன.
‘பாஜக தேசிய பொதுச் செயலா்கள் வினோத் தாவ்டே, தருண் சுக், துஷ்யந்த் குமாா் கெளதம் ஆகியோா் பிரசாரத்தை முன்னெடுப்பா். இவா்களில் வினோத் தாவ்டே ஒருங்கிணைப்பாளராக செயல்படுவாா். அனைத்து மாநில தலைநகரங்கள் மற்றும் இதர நகரங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் நிா்வாக அமைப்புகளை பலவீனப்படுத்தி வருவதாக பாஜக மீது காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
அரசமைப்புச் சட்டம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தின்போது, பி.ஆா்.அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.
இந்த சூழலில், பாஜக சாா்பில் அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...