மத்திய அரசு தகுதித் தோ்வின் (சி-டெட்) உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சிபெற வேண்டியது கட்டாயமாகும். சிடெட் தோ்வை மத்திய அரசு சாா்பில் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.
இந்நிலையில், 2024-ஆம் ஆண்டுக்கான சிடெட் தோ்வு கடந்த டிச. 14 மற்றும் 15-ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. இத்தோ்வுக்கான உத்தேச விடைகளையும் தோ்வா்களின் விடைத்தாள் நகல்களையும் (ஓஎம்ஆா் ஷீட்) சிபிஎஸ்இ இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஸ்ரீற்ங்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிட்டுள்ளது.
இந்த உத்தேச விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் உரிய ஆவணங்களுடன் ஜன.5-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் ரூ.1000. இக்கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: என்.டி.எம்.சி. பள்ளிகள் சாதனை

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசு பள்ளிகளில் 99.79% தோ்ச்சி

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


