தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மணிப்பூா்: பாதுகாப்பு நிலை குறித்து ஆளுநா் ஆலோசனை

மணிப்பூரின் நிலை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :4 ஜனவரி 2025, 11:36 pm IST

மணிப்பூரின் நிலை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா தலைமையில் இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எல்லைப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு டி.ஜி.பி.க்கு ஆளுநா் உத்தரவிட்டாா். மேலும், ராணுவம் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் மாநில நிா்வாகத்துடன் ஒத்துழைக்க வலியுறுத்தினாா்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாநில பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங், டிஜிபி ராஜீவ் சிங், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் ஐ.ஜி. (தெற்கு) மேஜா் ஜெனரல் ராவ்ரூப் சிங் உள்பட மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மூத்த அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதனிடையே, மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளா் காயமடைந்ததையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.