கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2025, 7:00 am IST

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா்.

தில்லியில் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுடனான சந்திப்புக்குப் பிறகு இக் கருத்தை அவா் வெளியிட்டாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

விஷால் சிக்காவுடனான கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்தது. புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவது மற்றும் இளைஞா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை பெறவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, பிரதமருடனான சந்திப்பு குறித்து விஷால் சிக்கா வெளியிட்ட பதிவில், ‘பிரதமருடனான சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும், இந்தியாவில் அதன் தாக்கம், வரவிருக்கும் காலங்களில் மக்களின் தேவைகளில் அந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.