சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தில்லியில் தாமரை மலரும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

பிரதமர் மோடி இன்று தில்லியில் பேசியவை...

News image

பிரதமர் நரேந்திர மோடி - PTI

Updated On :5 ஜனவரி 2025, 5:19 pm IST

தில்லியில் தாமரை மலரும் என்று நம்புவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரசை விமர்சித்துப் பேசினார்.

தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு நமோ பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தில்லியின் நியூ அசோக் நகரில் இருந்து உ.பி.யின் ஷஹிபாபாத் நகர் வரை இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

தில்லி ரோகினி பகுதியில் உள்ள ஜப்பானிய பூங்காவில் நடந்த 'பரிவர்தன் பேரணி'யில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தில்லியை விக்சித் பாரத் திட்டத்தின் தலைநகராக உருவாக்க வேண்டும். தில்லியின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மக்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். பாஜகவால்தான் தில்லியை வளர்க்க முடியும்.

நாம் 2025 ஆம் ஆண்டில் இருக்கிறோம். அடுத்த 25 ஆண்டுகள் முழு நாட்டின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாக இருக்கும். 25 ஆண்டுகளில் இந்தியா விக்சித் பாரதமாக மாறும். அதில் நாமும் அங்கம் வகிப்போம். இந்தியா நவீனமயமாக்கலின் புதிய சக்தியாக மாறும். மேலும், உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் காலம் விரைவில் வரப்போகிறது. அதற்கு தில்லியின் பங்களிப்பு அவசியம்” என்று பேசினார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில், ஆம் ஆத்மி ஆட்சியில் தில்லி துன்பகரமான நிலையில் மாறியுள்ளது. தில்லி தற்போது வளர்ச்சியை விரும்புகிறது. எனவே, மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாஜக நல்லாட்சியை கொடுக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

வட இந்தியாவிலும், ஒடிசா மற்றும் ஹரியானாவில் பாஜகவுக்கு தொடர்ந்து மூன்று முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தில்லியிலும் மீண்டும் ஒருமுறை எம்.பி.க்கள் அனைவருக்கும் மக்கள் ஆசி கிடைத்தது. தற்போது, சட்டசபை தேர்தலில் பாஜகவின் தாமரை மலரும் என நம்புகிறேன்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.