சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி?

பாஜக கூட்டணியில் சரத் பவார் அணி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

News image

சரத் பவார், சுப்ரியா சுலே - ANI

Updated On :7 ஜனவரி 2025, 12:49 pm IST

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணியுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியில் போட்டியிட்ட சரத் பவார் அணி, 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

முன்னதாகவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரும் சின்னமும் அஜித் பவார் அணிக்கே சொந்தம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சரத் பவார் அணியில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பவார் அணியில் விரைவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜக கூட்டணியின் ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 300-ஐ கடக்கும்.

மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இணைய சரத் பவார் தயாராக இருப்பதாகவும், அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மோடி அமைச்சரவையில் பதவி பெற முயற்சித்து வருவதாகவும் கட்சிக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபட்னவீஸுக்கு சுப்ரியா சுலே பாராட்டு

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை பாராட்டினார்.

“மகாயுதி அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. மிகவும் கடினமாக உழைப்பது வேறு யாரும் இல்லை, தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருவர் மட்டும்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

சுப்ரியா சுலே பாராட்டு தெரிவித்து ஒரு வாரத்துக்குள் சரத் பவார் அணி கூட்டணி மாற்றம் குறித்த செய்திகள் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ள நிலையில், சரத் பவார் அணி மாறினால் இந்தியா கூட்டணி மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது.

சரத் பவாருடன் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்க முயற்சித்த பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.