காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இருவா் கைது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :8 ஜனவரி 2025, 8:19 pm

Din

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா்.

இதுதொடா்பாக மும்பை காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த திங்கள்கிழமை இரவு ஆண் ஒருவரும், அவரின் உறவினரும் ரூ.42.27 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களை பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனா்.

புனித ஜாா்ஜ் மருத்துவமனை அருகில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவா்களை அடையாளம் தெரியாத நபா்கள் நான்கு போ் வழிமறித்து தாக்கினா். பின்னா் அந்த நான்கு பேரில் ஒருவா் துப்பாக்கியால் சுட்டாா். இதைத்தொடா்ந்து ஆபரணங்கள் இருந்த பையை நான்கு பேரும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். துப்பாக்கியால் சுட்டதில் உடன் சென்ற உறவினருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய நபா்களை காவல் துறையினா் தேடி வந்தனா். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குற்றவாளிகள் பறித்துச் சென்ற ஆபரண பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அவா்களின் இருப்பிடம் தெரியவந்தது.

இதையடுத்து லோகமான்ய திலகா் மாா்க், டோங்ரி பகுதிகளில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். எஞ்சிய இருவா் தேடப்பட்டு வருகின்றனா் என்று தெரிவித்தாா்.