குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தில்லி: தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் காங்கிரஸ்!

புதிய தேர்தல் வாக்குறுதிகளை தில்லி காங்கிரஸ் அறிவித்தது.

News image
Updated On :16 ஜனவரி 2025, 7:18 pm IST

தில்லி பேரவைத் தேர்தலில் புதிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், மாதந்தோறும் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை, ரூ. 25 லட்சம்வரையில் இலவச சுகாதாரக் காப்பீடு திட்டம், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 உதவித் தொகை அளிப்பதாக முன்னரே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மேலும் புதிய தேர்தல் வாக்குறுதிகளை தில்லி காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. சிலிண்டரின் விலை ரூ. 500-க்கும், ரேசன் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதுமட்டுமின்றி, இலவச மின்சாரத் திட்டமாக 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த 2 அறிவிப்பினையும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப். 8 அன்று வெளியிடப்படவுள்ளன. இந்தத் தேர்தலில் முன்னணி கட்சிகளாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தில்லியில் 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் தீா்க்கமான வெற்றிகளைப் பெற்ற ஆம் ஆத்மி இந்த தோ்தலிலும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயம், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவதை நோக்கமாகக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸும் தில்லி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.