உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார்.
மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி பகுதிக்குட்பட்ட நாகர் பசார் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். 34 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மதம் மாறி திருமணம் செய்ய காதலன் வீட்டில் சம்மதிக்காததால், காவல் நிலையத்தில் காதலி புகாரளித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கருவைக் கலைக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
பஸ்தி காவல் நிலைய அதிகாரி, இது குறித்து இரு வீட்டாரையும் அழைத்துப் பேசி காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சதாம் உசேன் மதம் மாறி தனது பெயரை சிவசங்கர் சோனி என மாற்றிக்கொண்டு காதலியை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் அப்பகுதியில் இருந்த கோயிலில் ஹிந்து முறைப்படி நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பெரும் திருப்பமாக திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதி காவல் துறையிடம் உண்மையைக் கூறியுள்ளது.
அதாவது, மதம் மாறி திருமணம் செய்துகொள்ள காதலன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால், இருவரும் பேசிவைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக காவல் துறை அதிகாரியிடம் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!

திருமணப் பதிவு மட்டுமே போதுமானதல்ல; மத சம்பிரதாயப்படி நடப்பதே ஹிந்து திருமணம் - குஜராத் உயா்நீதிமன்றம்
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை
அமெரிக்க திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; 12 போ் காயம்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



