எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

நீதி வேண்டும்; நிதி வேண்டாம்: கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அவரின் தந்தை அதிருப்தி

News image

தீர்ப்புக்கு பிறகு அழைத்துச்செல்லப்படும் சஞ்சய் ராய் - PTI

Updated On :20 ஜனவரி 2025, 9:53 pm IST

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும்; நிதி வேண்டாம் என பாதிக்கப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவரின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று (ஜன. 20) வெளியானது.

இதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்ததாவது,

சிபிஐ அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நல்ல தீர்ப்பு வழங்குவதாக வாழ்நாள் சிறையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட விசாரணையில் எங்களுக்கு ஏராளமான கேள்விகள் உள்ளன. நிதிக்காக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. எங்களுக்கு நீதி வேண்டுமே தவிர நிதி அல்ல. கொல்கத்தா காவல் துறையினர் செய்தது தவறு. இதனைத் தொடர்ந்து சிபிஐயும் சில விசாரணைகளைச் செய்தது. எங்கள் மகள் இறந்ததை விட அதிகமாக வலியை கொல்கத்தா காவல் துறையினரின் விசாரணை எங்களுக்குக் கொடுத்துவிட்டது என உருக்கமாகக் கூறினார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்திகரமாக இல்லை என முதல்வர் மமதா பானர்ஜியும் தெரிவித்திருந்தார். முன்னாள் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவும் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.