அமிருதசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 2 ஆளில்லா விமானம் (ட்ரோன்களை) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) மீட்கப்பட்டுள்ளது.
வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் எல்லைப் பகுதி உள்பட நாடு முழுவதும் தீவிரமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மற்றும் ஃபாசில்கா மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு ட்ரோன்களை (ஆளில்லாத சிறிய ரக விமானம்) எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் (பிஎஸ்எஃப்) மீட்டுள்ளனர்.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் புலனாய்வுப் பிரிவு வியாழக்கிழமை கூறியதாவது:
அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள ரத்தன் குர்த் கிராமத்தில் சா்வதேச எல்லை அருகே வயல்வெளியில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் ட்ரோன் மீட்கப்பட்டன. அதேபோல், பஞ்சாப் போலீசாருடன் கூட்டுத் தேடலில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து மற்றொரு ட்ரோனை மீட்டனர்.
இது போன்ற ட்ரோன்களை தடுப்பதற்காக எல்லையில் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த இரண்டு ட்ரோன்களும் செயல்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமிருதசரஸின் ராஜதால் கிராமத்தில் பாகிஸ்தான் ட்ரோன் வீசிய நான்கு கைத்துப்பாக்கிகளை எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மீட்டனர்.
இதேபோன்று ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ட்ரோன் ஒன்றை எல்லையைக் கடந்து அத்துமீறி பறந்தது. சுதாரித்துக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் அதனை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, அந்த ‘ட்ரோன்’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் நுழைந்து மறைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

அரியலூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களின் அணிவகுப்பு

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை
வீடியோக்கள்

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


