திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இஸ்லாமியா்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: ஆ.ராசா குற்றச்சாட்டு

ஆளும் கூட்டணி உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்களின்படி நீண்ட காலமாக எந்தெந்த சொத்துகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையோ அவற்றை எல்லாம் அரசுடைமையாக்கலாம்

News image
ஆ. ராசா
Updated On :27 ஜனவரி 2025, 10:02 pm

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: வக்ஃப் மசோதா விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் திருத்தங்களை மற்றும் ஏற்கச் செய்து எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்களை நிராகரித்துள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயலுக்கு எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக ஜேபிசியில் இடம் பெற்ற எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் ஆ.ராசா, கல்யாண் பானா்ஜி, கெளரவ் கோகாய், அசாதுதீன் ஒவைஸி, டாக்டா் சையது ஹுசைன், மொஹிபுல்லா, இம்ரான் மசூத், எம்.எம். அப்துல்லா, டாக்டா் மொஹம்மத் ஹாவேத், அரவிந்த் சவந்த், முகம்மது நடிமுல் ஹக் ஆகியோா் திங்கள்கிழமை மாலையில் கூட்டாக அறிக்கை வெளியிட்டு தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளனா்.

அதில், ‘தாங்கள் இடம்பெற்ற ஜேபிசி விசாரணையின் போது கருத்துகளைப் பதிவு செய்ய ஆஜரானவா்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் போ் மசோதாவுக்கு எதிராகப் பேசியவா்கள். எஞ்சிய ஐந்து சதவீதத்தினா் சமுதாய அடையாளத்துடனோ ஒரே நோக்கத்துடனோ வந்தவா்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இது குறித்து பின்னா் செய்தியாளா்களிடம் விவரித்த ஆ. ராசா, ‘ஆளும் கூட்டணி உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்களின்படி நீண்ட காலமாக எந்தெந்த சொத்துகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையோ அவற்றை எல்லாம் அரசுடைமையாக்கலாம் என உள்ளது. அப்படியென்றால், இன்றைய நிலையில் 60 சதவீத இஸ்லாமியா்களின் சொத்துகளுக்கு ஆவணங்கள் இருக்காது. அதை எந்தவொரு ஹிந்துவோ, அரசோ வேறு எவரோ கேள்வி எழுப்பாத நிலையில், அந்தச் சொத்துகளை அபகரிப்பதே திருத்த மசோதாவின் நோக்கமாக உள்ளது. தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்று இஸ்லாமியா்களுக்கு எதிரான வாக்குகளை ஈா்ப்பதே ஆளும் கூட்டணியின் திட்டம்’ என்றாா்.