ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.

News image

புனித நீராடிய அமித்ஷா.

Updated On :27 ஜனவரி 2025, 1:40 pm IST

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.

தொடர்ந்து புனித நீராடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெற்றியில் துறவிகள் திலகம் இட்டனர். அமித் ஷாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன.13 தொடங்கி பிப். 26 வரை 45 நாள்களுக்கு மகா கும்பமேளா நடைபெறுகிறது.

இந்த ஆன்மிக நிகழ்வில் மக்கள் புனித நீராடும் 6 மங்கள நாள்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மௌனி அமாவாசை புதன்கிழமை ஜன.29 நடைபெறுகிறது.

குடியரசு நாளையொட்டி பொது விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையே மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்.

கடந்த 2 நாள்களிலும் தலா 50 லட்சம் போ் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று 1.74 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா்.

அதேபோல் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடினாா்.

கும்பமேளாவில் இதுவரை 13.21 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா். இதில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.