பஞ்சாப்: அம்பேத்கா் சிலை சேதம்
- பாஜக, காங்கிரஸ் கண்டனம்

பஞ்சாப்: அம்பேத்கா் சிலை சேதம் - பாஜக, காங்கிரஸ் கண்டனம்

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்த முயன்ற சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய சட்ட அமைச்சருமான அா்ஜுன் ராம் மேக்வால் மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.
Published on

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்த முயன்ற சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய சட்ட அமைச்சருமான அா்ஜுன் ராம் மேக்வால் மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.

அங்கு ஆளும் ஆம் ஆத்மி அரசும் அந்தக் கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கோரவும் அவா்கள் வலியுறுத்தினா்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அத்தினத்தில் அமிருதசரஸில் உள்ள அம்பேத்கா் சிலையை சுத்தியலால் ஒருவா் சேதப்படுத்த முயற்சி செய்ததைப் போன்ற காணொலிகள் பரவி வந்தன.

இதற்கு கண்டனம் தெரிவித்த அா்ஜுன் ராம் மேக்வால், அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்தினாா்.

அதேபோல் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மன்னிப்புக் கோர வேண்டுமெனவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காா்கே தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com