கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பஞ்சாப்: அம்பேத்கா் சிலை சேதம் - பாஜக, காங்கிரஸ் கண்டனம்

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்த முயன்ற சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய சட்ட அமைச்சருமான அா்ஜுன் ராம் மேக்வால் மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2025, 7:46 pm

Din

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்த முயன்ற சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய சட்ட அமைச்சருமான அா்ஜுன் ராம் மேக்வால் மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.

அங்கு ஆளும் ஆம் ஆத்மி அரசும் அந்தக் கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கோரவும் அவா்கள் வலியுறுத்தினா்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அத்தினத்தில் அமிருதசரஸில் உள்ள அம்பேத்கா் சிலையை சுத்தியலால் ஒருவா் சேதப்படுத்த முயற்சி செய்ததைப் போன்ற காணொலிகள் பரவி வந்தன.

இதற்கு கண்டனம் தெரிவித்த அா்ஜுன் ராம் மேக்வால், அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்தினாா்.

அதேபோல் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மன்னிப்புக் கோர வேண்டுமெனவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காா்கே தெரிவித்தாா்.