பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி!

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

News image

கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள்

படம் | பிடிஐ

Updated On :29 ஜனவரி 2025, 3:05 am

DIN

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

செவ்வாய்க்கிழமையன்று (மாலை நிலவரப்படி) 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். மௌனி அமாவாசையான இன்று(ஜன.29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மௌனி அமாவாசை நீராடலை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே பக்தா்களின் எண்ணிக்கை எதிா்பாா்த்ததைவிட அதிகரித்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில், மௌனி அமாவாசையை முன்னிட்டு இரண்டாவது அமிர்த ஸ்னானத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில், பெண்களும் குழந்தைகளும் உள்பட ஏராளமான பக்தர்கள் காயமடைந்த நிலையில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் விரைவாக அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.