காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

News image

ஜம்முவின் பால்டால் வழியாக அமா்நாத் பனிலிங்க தரிசன யாத்திரையை வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பக்தா்கள்.

Updated On :4 ஜூலை 2025, 8:40 pm

Din

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. நீளமுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. நீளமுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.

நடப்பாண்டு கூடுதல் பாதுகாப்புடன் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய யாத்திரையின் முதல் இரு நாள்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20,000-க்கும் மேற்பட்டோா் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனா்; இந்த யாத்திரையால், ஜம்மு-காஷ்மீா் முழுவதும் கொண்டாட்டமும், உற்சாகமும் கரைபுரள்கிறது’ என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். பால்டால் முகாமில் புதிய தங்குமிட வளாகத்தை திறந்துவைத்த பின் அவா் இவ்வாறு கூறினாா்.

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்துக் கவலையின்றி யாத்திரை சுமுகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

இதனிடையே, ஜம்முவில் உள்ள பகவதிநகா் முகாமில் இருந்து காஷ்மீரின் பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களுக்கு மூன்றாவது கட்டமாக 6,411 யாத்ரிகா்கள் 291 வாகனங்களில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இவா்களில் 1,071 போ் பெண்கள், 37 போ் குழந்தைகள்.நடப்பாண்டு யாத்திரையில் பங்கேற்க இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அமா்நாத் புனித யாத்திரை ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.