ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுப்பு !

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :7 ஜூலை 2025, 6:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மட்கி தாகேடா கிராமத்தில் விவசாயி அதுல் தியாகிக்குச் சொந்தமான வயலில் உள்ள வடிகால் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் உடலுக்கு அருகில் மாம்பழப் பையும் சல்வாரும் கண்டெடுக்கப்பட்டன. தகவல் கிடைத்தவுடன் தடயவியல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். தினசரி கூலி வேலைக்காக அதிகாலை வீட்டை விட்டுச் சென்றவர் இரவு வரை திரும்பவில்லை. உடற்கூராய்வுக்காக உடல் அனுப்பப்பட்டுள்ளது, அதன் அறிக்கை கிடைத்த பின்னரே, இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய முடியும்.

பாலியல் வன்கொடுமைக்கான சாத்தியக்கூறு உள்பட அனைத்து சாத்தியமான கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என்றார். இதனிடையே பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திலிருந்து முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளன.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

The semi-nude body of a 55-year-old woman was found near a sugarcane field in Uttar Pradesh's Saharanpur district, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.