திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மீண்டும் எல்ஐசி பங்கு விற்பனை: மத்திய அரசு முடிவு

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளின் சிறிய அளவிலான பகுதியை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜூலை 2025, 3:44 am IST

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளின் சிறிய அளவிலான பகுதியை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

அரசிடம் இப்போது எல்ஐசி-யின் 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5 சதவீத பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. பங்குச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் எல்ஐசி பங்கு வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.926.90 என்ற விலையில் உள்ளது.

இப்போதைய நிலையில் மேலும் 6.5 சதவீத பங்குகளை மீண்டும் பங்குச் சந்தை மூலம் விற்பனைக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதை பங்குச் சந்தை நிலவரங்களை தெளிவாக ஆய்வு செய்து எல்ஐசி பங்குகளை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து மத்திய பங்கு விலக்கல் துறை முடிவு செய்யும் என்று தெரிகிறது.

2027 மே 16-ஆம் தேதிக்குள் 10 சதவீத எல்ஐசி பங்குகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு விடும். எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.85 லட்சம் கோடியாகும்.

எல்ஐசி பங்குகள் மீண்டும் விற்பனைக்கு வரும் என்ற தகவலையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சற்று சரிவைச் சந்தித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.