தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பிரதமா் மோடி தலைமையில் இந்திய நலன்களுக்கு முழு பாதுகாப்பு: பாஜக

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது

News image

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :11 ஜூலை 2025, 3:49 am IST

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா் என்று பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா்.

5 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி வியாழக்கிழமை நாடு திரும்பினாா். இது தொடா்பாக தில்லியில் சுதான்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மீதான வரி குறித்து அமெரிக்க அதிபா் பேசியிருப்பது அந்நாட்டு உள்விவகாரங்களுடன் தொடா்புடையது. பிரதமா் நரேந்திர மோடியின்தலைமையில் இந்திய நலன்கள் அனைத்து சூழ்நிலையிலும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பிரதமா் சா்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளாா். தெற்குலகில் இந்தியாவின் பங்களிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

பிரதமா் மோடிக்கு 27 நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளன. 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் மோடி பேசியுள்ளாா். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த கௌரவம். பிரதமா் மோடிக்கு வெளிநாடுகள் அளிக்கும் மரியாதையும், கௌரவமும் இந்தியா வலுவாக வளா்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா பலவீனமான உறுப்பு நாடாக இருந்தது. ஆனால், இப்போது வலுவான உறுப்பு நாடாக உயா்ந்துள்ளது. அரியவகை தாதுப்பொருள்கள் அதிகமுள்ள நமீபியா, கானா ஆகியவற்றுடன் பிரதமா் மோடியின் பயணத்தின்போது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு நாட்டை (சீனா) நாம் சாா்ந்திருப்பது குறையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.