சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தங்கக் கோயிலுக்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

பஞ்சாபிலுள்ள தங்கக் கோயிலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள தங்கக் கோயில்...

(கோப்புப் படம்)

Updated On :16 ஜூலை 2025, 12:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாப் மாநிலத்திலுள்ள, சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோயிலுக்கு மூன்றாவது முறையாக, இன்று (ஜூலை 16) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமிர்தசரஸ் மாவட்டத்தில், சீக்கியர்களின் புனிதத் தலமான, ஹர்மந்தீர் சாஹிப் என்றழைக்கப்படும் தங்கக் கோயிலுக்கு, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கோயில் நிர்வாகத்துக்கு வந்த மின்னஞ்சலில், தங்கக் கோயிலின் பைப்புகளினுள் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையின், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மாநில காவல் துறையினர் அங்கு விரைந்து தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கக் கோயிலுக்கு வருகைத் தரும் சூழலில், வெடிகுண்டு மிரட்டல்களினால் அன்றாட வழிபாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

ஏற்கனவே, கடந்த 2 நாள்களாக கோயில் வளாகத்தினுள் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள சூழலில், கூடுதல் படைகள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபர்களை அடையாளம் கண்டுபிடிக்க சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்கக் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், அது குறித்து காவல் துறையினர் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.