உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது.
உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சியா துலாரி, தனது மகன் அசோக் வாயிலிருந்து பாம்பின் சில பகுதிகளை அகற்றினார்.
இருப்பினும், அசோக் பாம்பின் ஒருசில பகுதிகளை ஏற்கெனவே உட்கொண்டு விட்டார். பின்னர் உடனடியாக அவர் உள்ளூர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.
அதிர்ஷ்டவசமாக, பாம்பு விஷமற்றதாக இருந்ததால் அசோக்கிற்கு பெரியஅளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
Summary
In Banda, Uttar Pradesh, a man named Ashok, under the influence of alcohol, reportedly swallowed a live snake that had entered his home.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!

உயிருள்ள நபா்களின் கல்லீரல்கள் லேப்ரோஸ்கோபிக் முறையில் நோயாளிக்கு பொருத்தம்: உலகில் முதல்முறையாக நொய்டா மருத்துவமனை சாதனை

மரங்களும் உயிர்கள்தான்! அடிப்படை உரிமைகளை அங்கீகரித்த நகரம்!
அரசு நிலத்தில் கட்டப்பட்ட மதரஸா இடிப்பு!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



