தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி: ராகுல் கண்டனம்!

பகுஜன் சமூகத்தை ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளிலிருந்து விலக்கி வைப்பதற்கான திட்டமிடப்பட்ட சதியாகும்.

News image

ராகுல் காந்தி

Updated On :25 ஜூலை 2025, 8:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

பகுஜன் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு எதிராக பாஜக சதி செய்து வருவதாக ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான காலியாக உள்ள இடஒதுக்கீடு பதவிகள் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மோடி அரசை தாக்கிப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் பதிவில்,

நாடாளுமன்றத்தில் மோடி அரசு முன்வைத்த புள்ளி விரவங்கள் பகுஜன்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும், நிறுவன ரீதியான மனுவாதம் இருப்பதற்கும் உறுதியான சான்றாகும்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்டி-களுக்கான பேராசிரியர் பதவிகளில் 83 சதவீதமும், ஓபிசிகளுக்கான 80 சதவீதமும், எஸ்சிகளுக்கான 64 சதவீதமும் வேண்டுமென்றே காலியாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரத்தில், எஸ்டி-களுக்கான உதவிப் பேராசிரியர் பதவிகளில் 65 சதவீதமும், ஓபிசி-களுக்கான 69 சதவீதமும், எஸ்சி-களுக்கான 51 சதவீதமும் காலியாக விடப்பட்டுள்ளன.

இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல.. பகுஜன் சமூகத்தை ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளிலிருந்து விலக்கி வைப்பதற்கான திட்டமிடப்பட்ட சதியாகும். பல்கலைக்கழகங்களில் 'பகுஜன்களின்' போதுமான பங்கேற்பு இல்லாததால், தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரச்னைகள் ஆராய்ச்சி மற்றும் விவாதங்களிலிருந்து வேண்டுமென்றே மறைந்துபோகும்படி செய்யப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி வேட்பாளர்கள் மனுவாத சிந்தனையின் கீழ் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். மேலும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காலியாக உள்ள அனைத்து பதவிகளும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மனுவாதம் புறக்கணிப்பு அல்ல, பகுஜன்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Summary

Congress leader Rahul Gandhi on Friday attacked the Modi government over vacant reserved posts for SCs, STs and OBCs in central universities and said this is not just negligence but a "well-planned conspiracy" to keep 'Bahujans' out of education, research and policies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.