நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டீ விற்றவருக்கு டீ விற்றவர்! பிரிட்டனில் ருசிகரம்!

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை விடியோ வைரல்

News image

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி - X | Narendra Modi

Updated On :26 ஜூலை 2025, 2:41 pm IST

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை விடியோ சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு சென்றிருந்தார்.

பிரிட்டனுக்கு புதன்கிழமையில் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, இருவரும் சேர்ந்து, இந்திய வம்சாவளி ஒருவர் வழங்கிய தேநீரையும் அருந்தினர்.

இந்திய வம்சாவளியான அகில் படேலின் தேநீர் கடையில், ஸ்டார்மரும் மோடியும் சேர்ந்து தேநீர் அருந்தினர். அவர்களுக்கு தேநீர் வழங்கிய அகில் படேல், ``தேநீர் விற்பவருக்கு மற்றொரு தேநீர் விற்பனையாளர் தேநீர் வழங்குகிறார்’’ என்று நகைச்சுவையாகக் கூறினார்.

முன்னொரு காலத்தில், தான் தேநீர் விற்றதைச் சுட்டிக்காட்டிப் பேசியதைக் கேட்டு, பிரதமர் மோடியும் ஸ்டார்மரும் சிரித்தனர்.

பிரிட்டன் பயணத்தின்போது, வியாழக்கிழமையில் (ஜூலை 24) இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது.

Story image

X | Narendra Modi

Summary

Indian-origin Chaiwala who served PM Modi masala tea in UK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.