ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரண்டுமே முஸ்லிம் நாடுகள்.. சாய்க்கப் பார்த்த பாகிஸ்தான்! கண்டுகொள்ளாத மலேசியா

இரண்டுமே முஸ்லிம் நாடுகள் என்று கெஞ்சிய பாகிஸ்தான் கோரிக்கையை மலேசியா கண்டுகொள்ளவில்லை.

News image
மலேசியாவில் நாடாளுமன்றக் குழுவினர்.
Updated On :4 ஜூன் 2025, 9:28 am

DIN

இந்தியாவுடனான உறவைத் துண்டித்துவிடுமாறும், நாம் இருவருமே முஸ்லிம் நாடுகள் என்பதால், எங்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்துவிட்டது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் கொடுக்க மலேசியா சென்றிருக்கும் சஞ்சய் ஜா தலைமையிலான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவினருடன் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் தூதரகம் வலியுறுத்தியிருந்ததாகவும் இதனை மலேசியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நாம் இருவரும் முஸ்லிம் நாடுகள், நீங்களும் முஸ்லிம் நாடு, எனவே, இந்திய தூதுக் குழுவினருடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுங்கள் என்று பாகிஸ்தான் தூதரகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கைகளை நிராகரித்திருக்கும் மலேசிய அரச, இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் 9 பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினரின் 10 நிகழ்ச்சிகளுக்கும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

முதல் எம்.பி.க்கள் குழு இது!

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முதல் எம்.பி.க்கள் குழு கடந்த வாரம் ஜப்பான் புறப்பட்டது.

இந்த முதல் குழுவானது, ஜப்பானைத் தொடர்ந்து, தென்கொரியா, மலேசியா சென்றுள்ளது. அடுத்து இந்தோனேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கும் இந்தக் குழு பயணித்து, பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவையும் அதற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.