பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பாகிஸ்தான் ராணுவத்தை விஞ்சிய ராகுல்: பாஜக விமர்சனம்!

பாகிஸ்தான் ஆதரவாக ராகுலின் பேச்சு, மனநிலை குறித்து பாஜக விமர்சித்துள்ளது.

News image

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி

Updated On :4 ஜூன் 2025, 3:11 pm IST

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை ராகுல் காந்தி குறைத்து மதிப்பிட்டது ஆயுதப்படைகளை அவமதிப்பதாக உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது..

அண்டை நாட்டிற்கு ஆதரவாகப் பேசுவதில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர், பிரதமர், பயங்கரவாத மூளையாக இருந்தவர்களைக் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விஞ்சிவிட்டார். அவரது அவதூறு கருத்துகள் ராகுலின் ஆபத்தான மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.

காங்கிரஸின் வரலாற்று நிகழ்வுகளை மேற்கொள் காட்டி அவர், இந்தியப் பகுதியின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்தது முதல், மோடி அரசின் கீழ் இந்தியாவின் ஜனநாயக சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் மேற்கத்திய அலட்சியம் குறித்தும், நேரு-காந்தி சரணடைந்த கதைகளால் வரலாறு நிறைந்துள்ளது.

இந்தியாவின் சிங்கம் பிரதமர் மோடி, அவர் யாருக்கும் அடிபணிய மாட்டார் என்று பாராட்டினார்.

கடந்த செவ்வாயன்று மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திட்டதாக வாஷிங்டன் கூறியிருக்கிறது.

அமெரிக்க அதிபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். வரலாறு இதற்குச் சாட்சி. இதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் குணம். மற்றவர்களுக்கு அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள் என்று பேசினார். அவருடைய இந்த கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து, இந்தியா அவர்களின் பெயரில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அவர்களின் இதயத்தில் உள்ளது. ராகுலின் கருத்துக்கள் முதிர்ச்சி மற்றும் தீவிரத்தன்மை இல்லை என்பதைக் காட்டுகின்றது.

காங்கிரஸ் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தானே தெரிவித்திருந்தால், அது அவரது நம்பிக்கை மீது கடுமையான கேள்வியை எழுப்புகிறது, ஆலோசகர்கள் இதற்குப் பின்னால் இருந்தால் அவர்களை மாற்றுவது குறித்து ராகுல் தான் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் கௌரவத்தையும் அதன் ஆயுதப் படைகளின் வீரத்தையும் குறைத்து மதிப்பிட்ட காந்தியை, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மற்றும் பிரதமரின் குடும்பப் பெயர்களைப் பயன்படுத்தி, "ராகுல் முனீர்" மற்றும் "ராகுல் ஷெரீப்" என்று திரிவேதி அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.