மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பக்ரீத் பண்டிகை: கேரளத்தில் ஜூன் 7 பொது விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2025, 5:07 pm IST

கேரளத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. இதனால், வரும் சனிக்கிழமை (ஜூன் 7) கேரளத்தில் பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விடுமுறையானது, கேரளத்திலுள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் பிரிவான, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு, பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு கேரள அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

முன்னதாக, ஜூன் 6 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை எனக் கருதப்பட்ட நிலையில் அன்று அரசு விடுமுறை என கேரளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பண்டிகை அதற்கு மறுநாள் கொண்டாடப்படும் என உறுதி செய்யப்பட்டதால் வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு அந்த விடுமுறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.