கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :6 ஜூன் 2025, 8:56 pm

Din

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒளி அடிக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

துபையிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், 304 பயணிகளுடன், வியாழக்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்த போது, பரங்கிமலை பகுதியிலிருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசா் விளக்கு ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஒளியை பாா்த்து சுதாரித்துக்கொண்ட விமானிதாழ்வாக பறந்து கொண்டு இருந்த, விமானத்தை மீண்டும் மேலும் உயரத்தில் பறக்கச் செய்தனா். அதோடு இதுகுறித்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், அவசரமாக தகவல் தெரிவித்தனா்

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து, விமான பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, விமானம் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சென்னை விமானநிலைய காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதோடு இதுபற்றி சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மே 25-ஆம் தேதி இரவு சென்னையில் தரையிறங்க வந்த, இதே எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் மீது இதைப்போல பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.